02 ஜூன் 2010

பார்வதி அம்மா உடல் நலம் தேறி வருவதாக சிவாஜிலிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார்.


வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் உடல் நலம் தேறி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பு செயலாளருமான சிவாஜிலிங்கம் வீரகேசரி இணையத்தளத்திற்குத் தெரிவித்தார். கடந்த சில காலமாக உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டிருந்த பார்வதியம்மாள் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில்அவரது உடல்நிலை தேறி வருவதாக வைத்தியர்கள் தெரிவித்ததாக அவர் மேலும் கூறினார்.அதேவேளை, பார்வதியம்மாள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பராமரிக்கப்படுவார் என சிவாஜிலிங்கம் தெரிவித்தார். மலேசியாவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பார்வதியம்மாள், பின்னர் மேலதிக சிகிச்சை பெறுவதற்காக இந்தியா சென்றிருந்தார். ஆனால் இந்தியா அவரைத் தடுத்து, இலங்கைக்குத் திருப்பி அனுப்பியது. பின்னர் நிபந்தனைகளுடனான சிகிச்சைகளுக்கு அனுமதி வழங்கியது. எனினும் அங்கு சிகிச்சை பெற விரும்பாத பார்வதியம்மாள் மற்றும் அவரது உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக