10 ஜூன் 2010

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏழு உடன்படிக்கைகள் கைச்சாத்து.


இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏழு உடன்படிக்கைகள் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று பிற்பகல் ஹைதராபாத் நகரிலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, சமூக, சட்ட, மகளிர் விவகாரம், மின்சாரம் மற்றும் போக்குவரத்து துறைகளைச் சார்ந்த ஏழு உடன்படிக்கைகள் இச்சந்திப்பின் போது கைச்சாத்திடப்பட்டன.இரு நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் இந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க உட்பட பல உயர் அதிகாரிகள் இந்த உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக