14 ஜூன் 2010

எயார்டெல் நிறுவனத்தின் கைத்தொலைபேசி அட்டைகளை திருப்பி அனுப்பும் விழா!


ஈழத்தமிழர்களை கொன்று குவித்த கொலைக்காரன் ராஜபக்சேவுடன் வணிக ஒப்பந்தம் செய்துள்ளதால் ஏர்டெல் நிறுவனத்தை தமிழுணர்வாளர்கள் புறக்கணித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை ஈழ உணர்வாளர்கள் 500 பேர் ஏர்டெல் சிம்கார்டை திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளனர். மேலும், சிம்கார்டு தருவதற்காக பெறப்பட்ட ஆவனங்களையும் திரும்ப தந்துவிடவேண்டும் என்று வலியுறுத்தவும் முடிவு செய்துள்ளனர்.
ஏர்டெல் சிம்கார்டை திருப்பி அனுப்புவதை ஒரு விழாவாக எடுக்க முடிவெடுத்துள்ளனர். அதன்படி இந்த விழா இவ்வார இறுதியில் நடைபெறுகிறது.
ஈழத்தில் தமிழினத்தைப் படுகொலை செய்த சிறிலங்க அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அங்கு செல்பேசி சேவையை நடத்திவரும் ஏர்டெல் நிறுவனத்தின் சேவையை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கோரும் பிரகடனத்தை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் திரு. பழ.நெடுமாறன் வெளியிட்டார்.
நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘’பிக்கி வர்த்தக அமைப்பின் தலைவராக உள்ளவர் ராஜன் பார்த்தி மிட்டல்.
இவருடைய நிறுவனம்தான் ஏர்டெல். இந்த ஏர்டெல் நிறுவனம் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள இலங்கை அரசுடன் கைகோர்த்து தனது வணிக நலன்களை மேம்படுத்திக்கொண்டு வருகிறது.
ஏர்டெல் நிறுவனத்துடன் இலங்கை அரசு கைகோர்த்து தனது வணிக நலன்களை மேம்படுத்திக்கொண்டு வருகிறது.
2008ஆம் ஆண்டு ஜனவரியில் இலங்கையின் ஒரு பகுதியில் – கொழும்பிலிருந்து புத்தளம் வரை – செல்பேசி சேவையை நடத்த அனுமதி பெற்ற ஏர்டெல், தற்போது 12இலட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் முதன்மையான செல் பேசி நிறுவனங்களில் ஒன்றாக இயங்கிவரும் ஏர்டெல்லிற்கு 13 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களில்1.25 கோடி வாடிக்கையாளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.
தமிழனைக் கொல்லும் அரசுடன் உறவு வைத்துக் கொண்டு, தமிழனோடு வணிகமும் செய்யும் மனிதாபிமானமற்ற ஏர்டெல் நிறுவனம், ஈழத் தமிழினத்தை அழித்த இலங்கையின் இனப் படுகொலைப் போரில் அந்நாட்டிற்கு உதவியதாகவும் குற்றச்சாட்டும் உள்ளது.
அந்த உதவிக்கு கைமாறாகத்தான் அங்கு செல்பேசி சேவை நடத்த அனுமதி பெற்றதென்றும் கூறுகின்றனர். டெல்லி வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் ஏர்டெல் செல்போன் நிறுவனம் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட திட்டமிட்டுள்ளதாகத்தெரிகின்றது.
ஆக, ஒரு நிறுவனத்திற்கு இருக்க வேண்டிய மனிதாபிமான பார்வை சற்றும் இல்லாமல், வெறும் இலாப நோக்கை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவது மட்டுமின்றி, தமிழின எதிர்ப்பில் ஆழமாக வேரூன்றிய நிறுவனமாக ஏர்டெல் செயல்பட்டு வருகிறது. எனவே ஏர்டெல் நிறுவனத்தை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்’’ என்று அறிவித்திருந்தார்.
இதையடுத்து தமிழுணர்வாளர்கள் ஏர்டெல் நிறுவனத்தை புறக்கணித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக