27 ஜூன் 2010

விமானங்களை கொள்வனவு செய்ய புலிகள் திட்டமாம் என்கிறது திவயின.



தமிழீழ விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய வலையமைப்பு விமானங்களை கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளதாக சிங்கள ஊடகமான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் நிதியைக் கொண்டு இரண்டு ஏ-380 எயார் பஸ் ரக விமானங்களை கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஈழ விமான சேவை என்ற பெயரில் இந்த விமானங்களை சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
அமெரிக்காவில் புலிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ருத்ரகுமாரன் என்பவரினால் இந்த யோசனைத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அரசுக்குச் சார்பான சிங்கள பத்திரிகையான திவயின வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக