02 ஜூன் 2010

பலாலிப்பகுதியில் பாரிய வெடிச்சத்தங்கள்!



யாழ் வலிகாமம் வடக்கு பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் நேற்று மாலை வேளையில் இடையிடையே ஏற்பட்ட பாரிய வெடியதிர்வுகள் பல மைல் தூரத்திற்கு உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாவனைக்கு உதவாத வெடிபொருட்களை சிங்களப் படையினர் வெடிக்க வைத்த பொழுது வெடியதிர்வுகள் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று குடிசார் வட்டாரங்கள் கூறுகின்ற பொழுதும், இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் எவையும் இதுவரை வெளிவரவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக