04 ஜூன் 2010

இலங்கையிலும் உரசிக்கொண்ட ஐஸ்சின் முன்னாள் காதலர்கள்!




தமிழின இயக்கங்களின் எதிர்ப்பால் இந்தி திரையுலகத்தின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் புறக்கணித்துவிட்ட நிலையில், கொழும்புவில் இந்திய சர்வதேச திரைப்படக் கழகத்தின் விருது வழங்கு விழா களையிழந்து துவங்கியது.
வான வேடிக்கைகள் விமரிசையாக நடந்தாலும் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஷாரூக் கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பங்கேற்ற மறுத்துவிட்டதால், இரண்டாம் நிலை ஹீரோக்களும், ஜீரோக்களும் தான் கலந்துகொண்டனர்.
இந்த விழாவையொட்டி நடத்தப்பட்ட ஆடை அலங்கார அணிவகுப்பில் சல்மான் கான் பெயரை விவேக் ஓபராய் அழைத்தார். ஆனால் அந்த அழைப்பை புறக்கணித்த சல்மான் கான், விவேக் ஓபராய் அழைத்தால் மேடைக்கு வர மாட்டேன் என்று முரண்டு பிடித்து, பழைய தகராறு(ஐஸ்வர்யாராயின் முன்னாள் காதலர்கள்) இன்னமு்ம தங்களுக்கிடையே கொதித்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதைக் காட்டினார். அதன் பிறகு வேறொரு நடிகர் அவர் பெயரை கூறி அழைக்க மேடைக்கு வந்தார் சல்மான் கான்.
இந்த நிகழ்வு பெரும் சர்ச்சையானது. பத்திரிக்கைகளும் ஜஃபா விழாவை விட இந்தச் சர்ச்சையையே பெரிதாக்கின. இதனால் விழா ஏற்பாட்டாளர்கள் மிகுந்த சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக