13 ஜூன் 2010

தீர்ப்பு சொல்வதற்கு கோத்தபாய நீதி அரசரோ சட்டத்தினைக்கள அதிகாரியோ அல்ல.-சரத் பொன்சேகா.



கோத்தபாய இடி அமீனைப்போல செயற்படுகின்றார். உலகத்தில் இப்படியான ஓர் முட்டாள்தனமான பாதுகாப்பு செயலரை நான் கண்டதில்லை. இவ்வாறு பிபிசியில் கோத்தபாயவின் கூற்றுக்கு பதில் கருத்து கூறும் போது பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கோத்தபாய நாட்டின் உயர் நீதியரசரோ அல்லது சட்ட திணைக்கள ஆணையாளரோ அல்லர்.
கோத்தபாயவினால் யாருக்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறமுடியாது.
அவரது முட்டாளதனமான பேச்சிற்கு நான் நேரத்தை செலவழிப்பதே வீண். சர்வதேச விசாரணைகள் வந்தால் நான் சாட்சியம் அளிப்பேன்.
சில அதிகாரிகளின் கட்டளைகள் தவறானவை.
அவையே படையினருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் பொன்சேகா மேலும்கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக