24 ஜூன் 2010

வெலிகந்த தடுப்பு முகாமில் போராளி ஒருவர் படையினரால் கொல்லப்பட்டுள்ளார்!


மட்டக்களப்பு பகுதியில் உள்ள வெலிக்கந்தை புனர்வாழ்வு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்கப் போராளிகளுக்கும் அங்குள்ள படையினருக்கும் இடையே இடம் பெற்ற வாக்கு வாதம் கைகலப்பாக மாறியது இதை அடுத்து முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்கப் போராளி ஒருவரை படையினர் பலமாகத் தாக்கியதில் அவர் இறந்து விட்டர் என்று தெரிய வருகிறது.

இதே வேளை வெலிக்கந்தை தடுப்பு முகாம் மற்றும் வவுனியா தடுப்பு முகாமிலுள்ள முன்னாள் போராளிகள் அவர்களது உறவினர்களுடன் தொலைபேசியில் உரையாடுவதற்கு இன்று முதல் இறுக்கமான தடை படைத்தரப்பால் அமுல் படுத்தப்பட்டுள்ளது. வவுனியா ஓமந்தை தடுப்பு முகாமில் உறவினர்களுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டார் என்பதற்காக முன்னாள் போராளி ஒருவரை படையினர் மரத்துடன் கட்டி வைத்துள்ளனர் என மேலும் தகவல்கள் கசிந்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக