27 ஜூன் 2010

பொதியொன்றில் கொலைசெய்யப்பட்ட நிலையில் இளைஞரின் சடலம்.


முந்தல் பொலிஸ் பிரிவில் தொடுவாவ பள்ளிவாசல் பாடு கடற் பிரதேசத்தில் வீசப்பட்ட பொதியொன்றை கண்ட மீனவர்கள் அதனை கரைசேர்த்து பார்த்த போது கொலை செய்யப்பட்ட நிலையில் இளைஞரின் சடலமொன்றை கண்டனர். முந்தல் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து இருவர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் ஒருவர் இரகசிய பொலிஸார் என தெரியவந்துள்ளது. இச் சம்பவம் இன்று மாலை 3.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட சடலமானது இந்திய நாட்டை சேர்ந்த 24 வயது நிரம்பியவரது என ஆரம்ப விசாரணையிலிருந்து தெரியவருவதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். விசாரணை தொடர்வதாகவும் அவர்கள் மேலும் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக