30 ஜூன் 2010

திருவாளர் கந்தையா பசுபதி அவர்களின் முதலாமாண்டு நினைவலைகள்.

துயர் சுமந்து தவிக்கின்றோம்!


புளியங்கூடல் மேற்கு ஊர்காவற்றுறையை சேர்ந்த திருவாளர் கந்தையா பசுபதி அவர்களின் முதலாமாண்டு நினைவலைகள்.

எங்களுக்காய் வரவு:15.03.1926

கலங்கவைத்து விரைவு 30.06.2010.

தந்தையே எமக்கு உயிர் தந்த தெய்வமே! நாளும் பொழுதும் உங்கள் நினைவுகள் சுமந்து கலங்குகிறோம் நாமிங்கு! என்னானது ஏதானது?எமைப்பிரிய எப்படியானது?பாசக்கூட்டில் வாழ்ந்த எம் கூட்டை உடைத்து தந்தை பறவை ஏன் தான் பறந்தது? பிள்ளைகள் இங்கு துடிப்பது தெரியுமோ?மனைவியே இங்கு கதறுதல் கேட்குமோ?மருமக்கள் இங்கு தவிப்பது புரியுமோ?பேரர்கள் இங்கு கலங்குதல் விளங்குமோ? யாருக்கும் தீங்கு எண்ணிடா உள்ளம்,ஊருக்கு உதவி செய்வதில் வள்ளல். பணமே வேண்டாமல் கைவைத்தியம் செய்வதில் சமர்த்தர், உறவுகளை விடவும் நட்புக்கள் அதிகம் கொண்ட பண்பாளர், இனி எங்கே காண்போம் தந்தையே உங்களை? இன்னொரு பிறப்பு எமக்கு இருந்தால் உங்களின் பிள்ளைகளாய் பிறக்கவே வேண்டுகிறோம்!என்றுமே நீங்கா துயர் சுமந்து நிற்கிறோம் தந்தையே உங்கள் நினைவலைகளால்.
தகவல்:மனைவி,பிள்ளைகள் மருமக்கள்,பேரப்பிள்ளைகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக