09 ஆகஸ்ட் 2011

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பூசல் வலுக்கிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை பிரதித் தலைவர் கரு ஜயசூரியவிற்கு வழங்க வேண்டுமென இன்று நடைபெற்ற கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் கட்சியின் இணைப் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ யோசனை முன்வைத்துள்ளார்.
எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்த கூட்டம் இடம்பெற்றது.
சஜித் பிரேமதாஸ முன்வைத்த யோசனைக்கு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார ஆதரவு அளித்துள்ளார்.
கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் அண்மையில் கூடிய கட்சி ஆலோசனை சபைக் கூட்டத்தில் தீர்மானங்கள் சில எடுக்கப்பட்டதாக இதன்போது ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இன்று மாலையும் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க இங்கு கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக