16 ஆகஸ்ட் 2011

மரண தண்டனைக்கு எதிராக தமிழகமெங்கும் போராட்டம்.

ராஜீவ் கொலை வழக்கில் தூக்குக் கைதிகளாக வேலூர் சிறையில் அடைபட்டிருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருக்கும் நிலையில் விரைவில் அவர்கள் தூக்கிலிடப்படலாம் என்ற செய்தி பரவியுள்ளதைத் தொடர்ந்து தமிழகம் முழுக்க மரணதண்டனைக்கு எதிரான குரல்கள் வலுக்கத் துவங்கியுள்ளன. நாம்தமிழர்,
பெரியார் திராவிடர் கழகம், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அமைப்புகள் மரணதண்டனைக்கு எதிராக வலுவாக குரல் கொடுத்து வரும் நிலையில் தமிழகமெங்கிலும் உள்ள சிறு சிறு தமிழ் அமைப்புகளும் தீவீர பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். இன்று சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சீமானும், பெரியார் திராவிடர் கழகத் தலைவர்களும் பேசுகின்ற அதே நேரம் ராதாஸ், வைகோ, திருமாவளவன் ஆகியோரும் மரணதண்டனைக்கு எதிரான பொதுக்கூட்டங்களில் பேசுகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான அமீர், ஜனநாதன். சேரன் ஆகியோரும் மரணதண்டனைக்கு எதிரான தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இன்னொரு மனித உரிமைக் குழுவினரோ இந்தியா முழுக்க உள்ள மனித ஆர்வலர்களின் கருத்துக்களை இது தொடர்பாக பெறும் முயர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். 2009 - மே மாதத்தின் பின்னர் மீண்டும் பெரும் இயக்கம் போல முன்னெடுக்கப்படும் இந்த போராட்டங்களை உளவுப் போலீசார் குறிப்பெடுத்து தவறாமல் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக