
இவர்கள் வீடுகளுக்குள் நுழைந்து வீட்டில் உள்ளவர்களின் பெயர் விபரங்கள், ஆள் அடையாள அட்டைகளின் விபரங்களைப் பதிவு செய்திருப்பதுடன் வீடுகளுக்குள்ளும் துருவித் துருவித் தேடுதல் நடத்தி வருவதாக அங்கிருந்து எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒட்டுசுட்டானில் பொலிஸ் நிலையம் எதுவும் இல்லாத நிலையில் அங்கு பொலிஸார் வரவளைக்கப்பட்டிருக்கின்றமை மக்கள் மத்தியில் சந்தேகம் வலுப்பெற்றிருப்பதாகத் தெரியவருகின்றது. இதேவேளை வன்னியின் பல பாகங்களிலும் இவ்வாறான நடவடிக்கைகள் கடந்த இரவு முதல் இடம்பெற்று வருகின்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை குறித்த பகுதிகளில் நின்றிருந்த இராணுவத்தினர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு புதிய இராணுவத்தினர் அந்தப் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக