24 ஆகஸ்ட் 2011

பேரறிவாளன்,சாந்தன்,முருகன் மூவரையும் இந்திய சட்டத்தின்படி தூக்கிலிட முடியாது.

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரையும் இந்திய சட்டப்படி தூக்கிலிட முடியாது என்று பிரபல வழக்கறிஞர் கருத்து தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேருக்கும் விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை நிறுத்தக் கோரி தமிழக முதல் அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து தமிழ்நாடு செய்தியாளர் சங்கம் சார்பில் சென்னையில் 22.08.201 அன்று பொதுக்கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு,
பூந்தமல்லி தடா கோர்ட் இந்த வழக்கில் 26 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது. இந்த வழக்கு மேல் விசாரணைக்காக சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்தபோது, தடா கோர்ட்டின் தீர்ப்பை கண்டித்தது. 4 பேர் தவிர மற்ற அனைவரின் தண்டனைகளும் குறைக்கப்பட்டன.
நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி கே.டி.தாமஸ் குறைத்தார். அதற்கு அவர் கூறிய காரணம் நளினிக்கு சதி செயலில் நேரடி பங்கு இல்லை என்பதாகும். அந்த காரணம் இந்த 3 பேருக்கும் பொருந்தும்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை என்பது 14 ஆண்டுகள் ஆகும். இவ்மூவரும் ஏற்கனவே ஒன்றரை மடங்கு ஆயுள் தண்டனையை அனுபவித்து விட்டனர். இந்திய சட்டப்படி ஒரு குற்ற வழக்கில் 2 தண்டனை விதிக்க முடியாது. அந்த அடிப்படையில் இவர்களை தூக்கிலிடுவது இந்திய சட்டத்திற்கு எதிரானது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக