10 ஆகஸ்ட் 2011

ராஜபக்ஸ சகோதரர்கள் மீது போர்க் குற்ற விசாரணை வேண்டுமென கருத்துக்கணிப்பில் மக்கள் ஆணை.

இந்தியாவில் இருந்து இயங்கிவரும் ஆங்கில தொலைக்காட்சியான ஹெட்லைன்ஸ் ருடே இன்று தமது இணையத்தளமூடாக ராஜபக்ஸே சகோதரர்கள் மீது போர்க்குற்ற விசாரணை நடாத்த வேண்டுமா இல்லையா என்று எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் போது 97.25% மக்கள் ராஜபக்ஸே சகோதரர்கள் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் என்று தமது அழுத்தமான பதிலை உலகிற்கு உரத்து எடுத்துக்கூறியுள்ளனர்.
ராஜபக்ஸே சகோதரர்கள் மீது போர்க்குற்ற விசாரணை நடாத்த வேண்டும் என்று 7600 பேரும் இல்லை என்று வெறும் 189 பேரும் வாக்களித்துள்ளனர்.
26 பேர் பதிலளிக்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.
மொத்தமாக 7815 பேர் வாக்களித்திருந்தனர் என்பதோடு இந்த கருத்துக்கணிப்பு சில மணிநேரங்களே நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக