27 ஆகஸ்ட் 2011

தூக்கை எதிர்த்து முப்பதினாயிரம் வழக்கறிஞர்கள் ஆஜராகிறார்கள்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் 29.8.2011 அன்று தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கேட்டு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
இந்த மனு, விசாரணைக்கு வரும் நாளன்று தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து 30 ஆயிரம் வழக்கறிஞர்களை நீதிமன்றத்திற்குள் வரவழைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்று , சாதி ஒழிப்பு விடுதலை அமைப்புக்கான ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த் கூறினார்.
முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரையும் வேலூர் சிறையில் சந்தித்துவிட்டு வெளியே வந்த ரஜினிகாந்த், இந்த தகவலை நம்மிடையே தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக