18 ஆகஸ்ட் 2011

தமிழக முதல்வர் கருணை உள்ளத்தோடு முடிவெடுக்க வேண்டும்.

வேலூர் மத்திய சிறையில் உள்ள தூக்கு தண்டனை கைதிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான் சந்தித்தார். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,
தமிழக முதல்வர் கருணை உள்ளத்தோடு இவ்விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும். தூக்கு தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதனை மத்திய அரசுக்கு அனுப்பி, தூக்கு தண்டனையை நிறுத்துமாறு வலியுறுத்த வேண்டும் என்றார்.
திமுகவும் தூக்கு தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்துள்ளதே என்ற கேள்விக்கு பதில் அளித்த சீமான், எந்தக் கட்சியாக இருந்தாலும் பரவாயில்லை. தூக்கு தண்டனையை எதிர்க்கும் கட்சிகளோடு இணைந்து போராட தயாராக உள்ளோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக