26 ஆகஸ்ட் 2011

சுமந்திரனால் ஏமாற்றபட்டார்களா கஜேந்திரனும் கஜேந்திரகுமாரும்?

இந்தியாவில் நடைபெற்ற தமிழ்க் கட்சிகளின் கூட்டம் தோல்வியில் முடிந்தாலும் அதன் பின்னணியில் சில வெளிவராத சுவாரசியமான சம்பவங்களும் நிகழ்ந்தேறியிருக்கின்றமை தற்போது அம்பலமாகியிருக்கின்றது.
இந்தியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழ்க் கட்சிகளின் கூட்டத்திற்கான ஏற்பாட்டினை இந்தியக் காங்கிரஸ் எம்பியான சுதர்சன நாச்சியப்பன் மேற்கொண்டிருந்தார். இந்த அழைப்பு அனைத்துக் கட்சிகளுக்கும் அனுப்பட்ட போது இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கும் அனுப்பப்பட்டிருந்தது.
இந்த அழைப்பின் அடிப்படையில் கஜேந்திரகுமாரும் கஜேந்திரனும் இந்தியா செல்வதென முடிவெடுக்கப்பட்டிருந்தது. இந்த முடிவுக்கு அமைய லண்டனில் வாசம் செய்துவருகின்ற கஜேந்திரகுமார் கஜேந்திரனை அழைத்துச் செல்லவேண்டும் என்பதற்காக முதன் நாளே கொழும்பை வந்தடைந்தார்.
கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலத் தலைவராகச் சொல்லப்படுகின்ற தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உட்பட்டவர்களை சில மணிநேரமாகச் சந்தித்து இந்தியாவில் நடைபெறவுள்ள தமிழ்க்கட்சிகளின் கலந்துரையாடல் தொடர்பில் கலந்துரையாடியிருக்கின்றனர்.
சுமந்திரனுடனான சந்திப்பின் போது இந்தியாவில் தமிழ்க்கட்சிகள் இணைந்து ஒருமித்த நிலைப்பாட்டில் செயற்படுவது என்றும் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பிலும் கொள்கை அளவில் இரண்டு தரப்பினருக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டிருக்கின்றது.
சுமந்திரன் அளந்த கதையினை நம்பி இந்தியா சென்ற கஜேந்திரகுமாருக்கும் கஜேந்திரனுக்கும் இந்தியாவில் வைத்து பாடம் புகட்டியிருக்கின்றார் சுமந்திரன். தமிழர்களுக்கான தீர்வின் போது ‘சுயநிர்ணய உரிமை‘ வழங்கப்பட வேண்டும் என்று கஜேந்திரகுமார் தரப்பு வாதிட்ட போது சுமந்திரன் உட்பட்டவர்கள் அந்த விடயத்தினை நீக்கிவிட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு கஜேந்திரகுமார் தரப்பினை வற்புறுத்தியிருக்கின்றனர்.
சுமந்திரன் தரப்பு திடீர் பல்டி அடிக்கும் என எதிர்பார்த்திராத கஜேந்திரகுமார் தரப்பு சற்றுநேரம் திகைத்துப் போய் இருந்ததாக தெரியவந்திருக்கின்றது. தமிழீழ விடுதலைப்புலிகளின் நேரடிப் பிரதிநிதிகளாகத் தம்மைச் சொல்லிக் கொள்கின்ற கஜேந்திரகுமாரும் கஜேந்திரனும் தமிழ்த் தேசியத் துரோகி ஈஎன்டிஎல்எப் பரந்தன் ராஜன் முன்னின்று நடத்திய கூட்டத்தில் பங்கெடுத்தது மட்டுமல்லாமல் சுமந்திரன் இலங்கையில் தெரிவித்த கருத்தில் இருந்து மாறுப்பட்ட நிலைப்பாடெடுத்ததால் சந்தித்த அவமானம் நாடாளுமன்றத் தேர்தலில் சந்தித்த படுதோல்வியிலும் மோசமானது என்றார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய பொறுப்பில் இருந்து கட்சி தொடர்பிலான அதிர்ப்தி நிலையில் இருக்கும் முக்கியஸ்தர் ஒருவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக