15 ஆகஸ்ட் 2011

கடற்படை முகாம் மீது பொதுமக்கள் தாக்குதல்!

கிண்ணியா கடற்படை முகாம் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காவல்துறை ஜீப் வண்டி ஒன்றை பொதுமக்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளதாக திருகோணமலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த மோதல் சம்பவத்தில் ஒரு காவல்துறை உத்தியோகத்தரும், இரண்டு பொதுமக்களும் காயமடைந்துள்ளனர்.
கிறிஸ் பேய் ஒன்று கடற்படை முகாமிற்குள் சென்றதாகத் தெரிவித்து மக்கள் கடற்படை முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு தாக்குதல் நடத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முகாம் மற்றும் முகாமை அண்டிய பிரதேசம் சேதமடைந்து உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறையினர், இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் கூட்டாக இணைந்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக