27 ஆகஸ்ட் 2011

தலைவரின் வீட்டை உடைத்தோர் வல்வெட்டித்துறை மண்ணை என்ன செய்ய போகிறார்கள்!?

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் வீட்டை உடைப்பதும் அந்த இடத்தில் ஒரு வீடு இருந்ததற்கான அடையாளமே தெரியாது உடைத்தழிப்பதும் இன நல்லிணக்கத்துக்கு ஒரு போதும் உதவாது என்று வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
இத்தகைய செயல்கள் தமிழ் மக்கள் மனதில் ஆறாத காயங்களையே ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வல்வெட்டித்துறை வீடு படையினரைக்குவித்து பெக்கோ பாரந்தூக்கிகள் மூலம் முற்றாக அகற்றப்பட்டுள்ளது. கட்டடச் சிதைவுகளை டிப்பர் வாகனங்கள் மூலம் அள்ளி சென்றனர். இது எங்கே கொண்டுசெல்லப்பட்டது என்பது தெரியவில்லை. இது தேசிய நல்லினக்கத்துக்கு ஒருபோதும் உதவாது. தமிழ் மக்களின் மனங்களில் ஆறாத காயமே இத்த கைய செயல்கள் மூலம் ஏற்படும். மீண்டும் இனங்களும் ஒட்டமுடியாது நிலைமையை நோக்கி அரசு சென்று கொண்டிருக்கின்றது” என்றார் சிவாஜிலிங்கம். வீட்டின் சிதைவுகளை எடுத்துச் சென்றவர்கள் அங்கு இருக்கும் எம் வல்வெட்டித்துறை மண்ணை என்ன செய்யப் போகிறார்கள்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக