08 ஆகஸ்ட் 2011

மனித உரிமை பேரவை அமர்வுகளில் இலங்கை விவகாரம் இல்லையாம்.

எதிர்வரும் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை அல்லது பாதுகாப்புப் பேரவை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் மட்டுமே இறுதிக் கட்ட யுத்தம்தொடர்பில் விசாரணை நடத்தப்பட முடியும் என ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்திருந்தார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள அமர்வுகளில் இலங்கை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படக் கூடிய சாத்தியமில்லை என மனித உரிமைப் பேரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், மனித உரிமை விவகாரம் என்ற தலைப்பின் கீழ் இலங்கை தொடர்பான கருத்துக்கள் எழுப்பப்பட முடியும் என பேச்சாளர் ரவினா சம்டாசினி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக