25 ஆகஸ்ட் 2011

இந்திய மக்களவையில் இலங்கை தொடர்பான விவாதம்.

பல் வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் இன்று மக்களவையில் இலங்கை இனப்பிரச்சனை தொடர்பான விவாதம் நடந்தது. இன்றைய விவாதத்தை துவக்கி வைத்துப் பேசிய திமுக உறுப்பினர் டி.ஆர். பாலு. போஸ்னியாவிலும் உகாண்டாவிலும் இனப்படுகொலை குற்றங்களில் ஈடுபட்டவர்கள் சர்வதேச விசாரணையை எதிர்கொள்ளும் போது பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்த ராஜபக்ஸ சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்தக் கூடாதா? 2009 -ல் வன்னி மீதான தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதை சர்வதேச அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நிராயுதபாணிகளான மக்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் தாக்கியிருக்கிறார்காள். இறுதிப்போரின் போது சுமார் 40, 000 தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்காள். ஆனால் இப்படி மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இலங்கை இராணுவத் தளபதியை விசாரிக்கக் கூட இலங்கை அரசு மறுத்து வருகிறது.
இப்போது போர் முடிந்து விட்ட நிலையிலும் அங்கே தமிழுக்கும் தமிழர்களுக்கும் மரியாதையில்லை. அங்குள்ள சிறுபான்மை தமிழ் மக்களுடன் சிங்களர்களும் அரசும் ஒரு கலாசாரப் போரை நடத்திக் கொண்டிருக்கிறது. தமிழர்கள் பகுதிகள் முழுக்க இராணுவம் ஆக்ரமித்து நிற்கிறது. தமிழர்களின் வழிபாட்டுத் தலங்கள் ஆக்ரமிக்கப்பட்டுள்ளன. இப்போது அந்த மக்கள் நிராதரவான நிலையில் உள்ளனர். இனப்படுகொலை புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த இந்தியா நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.'' என்று திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு துவக்கி வைத்தார்.
ஐஸ்வந்த் சிங்., சித்தன்.
இதைத் தொடர்ந்து பேசிய பிஜேபி உறுப்பினர் ஐஸ்வந்த்சிங் ஃஃஇலங்கையின் இன ரீதியாக முரண்பாடு உள்ளது. தமிழர்கள் சிறுபான்மை மக்கள் என்பதால் அவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். அதனுடைய தொடர்ச்சியாக கச்சத்தீவிலும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள் ஆகவே இலங்கை இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்ஃஃ என்று பேசினார். காங்கிரஸ் உறுப்பினர் சித்தன் பேசும் போது . இந்தியா கொடுத்த உதவிகளை இலங்கை தமிழ் மக்களுக்கு கொடுக்கவில்லை. இந்திய கட்டிக் கொடுப்பதாக சொன்ன வீடு விஷயத்தில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. இந்தியா வழங்கிய டிராக்டர்களை இலங்கை மக்களுக்குக் கொடுக்கவில்லை. இந்தியா வழங்கிய உணவுப்பொருட்களைக் கூட இலங்கை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவில்லை. என்றூ பேசினார் விவாதம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக