20 ஆகஸ்ட் 2011

புலிகளின் வலையமைப்பை இல்லாதொழிக்க இலங்கைக்கு அமெரிக்கா உதவுகிறதாம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயற்படுகிறதென நம்புவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அச்சம் வெளியிட்டுள்ளது என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது.
அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2010ம் ஆண்டுக்கென அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசாங்கம் கூறிவருகின்றபோதும் புலிகளின் சர்வதேச வலையமைப்பு முற்றாக ஒழிக்கப்படவில்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் 2010ம் ஆண்டு பாரிய தீவிரவாத செயல்கள் இடம்பெறாவிட்டாலும் தீவிரவாத செயல்களுக்கு பணம் மற்றும் உதவிகள் வழங்கியமை தொடர்பில் அதிக தகவல்கள் வெளியானதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தீவிரவாதத்தை மீண்டும் தலைதூக்காது செய்ய இலங்கை அரசாங்கம் வெவ்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ள போதும் அதற்கான ஒத்துழைப்புக்களை அமெரிக்கா வழங்கியுள்ளதாக அதன் இராஜாங்க திணைக்கள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளுக்கு பணம் பெற்றுக்கொடுப்பதை நிறுத்த இலங்கை அரசாங்கம் செயற்படும் ஒவ்வொரு விடயத்திற்கும் அமெரிக்கா தனது ஆதரவை வழங்கும் என அவ்வறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.(உண்மையான பயங்கரவாதிகள் ஸ்ரீலங்கா அரசும் அதன் படைகளும்தான் என்பது நிரூபணமாகி வரும் நிலையில்
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் இவ்வறிக்கை வியப்பாகவே இருக்கிறது!)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக