10 ஆகஸ்ட் 2011

இந்தியத் தொலைக்காட்சி வெளியிட்ட போர்க் குற்ற ஆதாரம்!

ஹெட்லைன்ஸ் டுடே” தொலைக்காட்சியில், “போருக்கு பிறகு” தமிழீழப் பகுதிகளில் “நேரடியாக” ஒரு ஊடகவியலாளர் சென்று, ” இலங்கை அரசாங்க அனுமதியோ” அல்லது அவர்கள் நிபந்தனை விதிப்பதைப் போல ” பாதுகாப்பு அமைச்சக அனுமதியோ” பெறாமல், அதனாலேயே “சுதந்திரமாக” யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களுக்கும், அங்குள்ள ” இடம் பெயர்ந்த மக்கள் வாழும் முகாம்களுக்கும்” சென்று அவர்களது நேர்காணல்களையும், காணொளிகளையும் “கையடக்க ஒளி ஒலி கருவி மூலம் பதிவு செய்து வந்துள்ளவற்றை காணலாம்.
சென்னையில் உள்ள அந்த காட்சி ஊடகத்தின் பெண் ஊடகவியலாளரான” பிரியம்வதா” அந்த சாதனையை செய்துள்ளார். எந்த நேரத்திலும் பிடிபட்டு துன்புறுத்தப்படலாம் என்று தெரிந்தும், எந்த சமயத்திலும் கொல்லப்படலாம் என்று புரிந்தும், அந்த இளம் ஊடகவியலாளர் அத்தகைய செயலை செய்து, “தமிழர்களின்” நிலைமையை உலகறியச் செய்துள்ளார். “ரசாயன குண்டுகள்” எறியப்பட்ட ஆதாரங்கள் அதில் கிடைத்துள்ளன. இனியும் “போர்குற்றங்கள்” நடைபெறவில்லை என்பார்களா இன அழிப்பாளர்கள்?





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக