26 ஆகஸ்ட் 2011

அற்புதம்மாள் சாகும்வரை உண்ணாவிரதம்!கிருஷ்ணசாமி அவையிலிருந்து வெளிநடப்பு,தமிழகம் முழுதும் போராட்டம்.

இன்னும் ஏழு வேலை நாட்களுக்குள் ராஜீவ் கொலை வழக்குக் கைதிகள் முருகன், சாந்தன் , பேரறிவாளன் ஆகியோர் தூக்கிடப்படலாம் என்ற செய்தி பரவியுள்ள நிலையில் இன்று தமிழக சட்டமன்றத்தில் இன்றூ புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி - ‘’சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனை குறீத்து அவையில் விவாதத்தி ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாக தனக்கு பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். ஆனால் சபாநாயகர் ஜெயக்குமார் இந்தப் பிரச்சனையை அவையில் எழுப்ப அனுமதியில்லை. வேண்டுமென்றால் என் அறையில் தனிப்பட்ட முறையில் வந்து பேசுங்கள் என்றார். இதனால் டாக்டர் கிருஷ்ணசாமி அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தார். அவைக்கு வெளியே அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கிலிடுவதற்காக உத்தரவு வேலூர் சிறைக்கு வந்துள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் தூக்கிலிடும் நிலைமை உள்ளது. தமிழக சட்டமன்றத்தில் அவர்களை காப்பாற்ற கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தால் மட்டுமே அவர்கள் உயிரை காப்பாற்ற முடியும். கடந்த ஒரு வருடமாக இந்த பிரச்சினையை சட்டசபையில் எழுப்ப முயற்சி செய்து வருகிறேன். ஏற்கனவே 2 முறை இதற்கு எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. இன்றும் அனுமதி கேட்டேன். சபாநாயகர் அனுமதி வழங்க வில்லை. எனவே நான் வெளிநடப்பு செய்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகம் முழுக்க போராட்டம்:
பேரறிவாளனின் தயார் அற்புதம்மாள் அவரது இல்லத்திலேயே சாகும்வரை உண்ணாவிரத்தை துவங்கியிருக்கும் நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தூக்குத் தண்டனையை இரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் கயல்விழி, வடிவாம்பாள் மற்றும் சுஜாதா காலவரையற்ற உண்ணா நிலை போராட்டத்தை துவங்கியுள்ளனர். பல் வேறு அரசியல் கட்சிகள் மனித் உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்டோர் அங்கு ஏராளமானோர் திரண்டு வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தைச் சுற்றி அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கான தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கோரும் கடிதம் வேலூர் சிறைக்கு வந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகம் முழுக்க பல் பல் வேறு அமைப்புகள் தூக்குத் தண்டனையை இரத்து செய்யக் கோரி தீவீரமான போராட்டங்களை முன்னெடுத்து வந்தன. இன்று நீதிமன்றத்தை நாடி தூக்கை தடுத்து முயர்ச்சியும் அவர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் நேற்று நள்ளிரவு முதலே தமிழகம் முழுக்க அதிரடி விரைவுப்படையினர் தங்களின் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். முக்கிய பிரமுகர்கள் திவீர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் இலங்கை அரசு நிறுவனங்கள் தூதரகம், வங்கி, பௌத்த மடாலயம், உள்ளிட்ட பகுதிகளில் அதிரடிப்படை நிறுத்தப்பட்டுள்ளனர். வேலூர் சிறையைச் சுற்றி அதிரடிப்படை பாதுக்காப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வேலூர் சிறையதிரிகளும் சிறைத்துறை ஐஜி யும் வேலூரில் முகாமிட்டு சிறையில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது. இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் இன்றே முறையீடு செய்தால் மட்டுமே மூவரின் உயிரையும் காப்பாற்றும் சாத்தியங்கள் உள்ள நிலையில், நாளையும், நாளை மறு நாளும் நீதிமன்ற விடுமுறை நாளாகும் இது தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராடும் சக்திகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அற்புதம்மாள் சாகும் வரை உண்ணாவிரதம்!
முருகன், சாந்தன். பேரறிவாளன் ஆகியோரின் தூக்கிலிடக் கோரும் உத்தரவு வேலூர் சிறைக்கு வந்து விட்ட நிலையில் பேரறிவாளனின் தயார் அற்புதம்மாள் தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி நேற்று மாலையிலிருந்து சாகும்வரை உண்ணாவிரதத்தை துவங்கியிருக்கிறார். வீட்டிலிருந்த படியே உண்ணாவிரத்தை துவங்கியிருக்கும் அவரை பல பிரமுகர்கள் சந்தித்து வருகிறார்கள். தமிழக முதல்வர் ஜெயலாலிதா மனது வைத்து தமிழக அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றினால் இந்த தூக்குத் தண்டனையை நிறுத்த முடியும் என்னும் நிலையில் அவர் முதல்வரிடம் வேண்டியும். இந்திய அரசிடம் தூக்கை நிறுத்தக் கோரியும் இந்த போராட்டத்தை துவங்கியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக