21 ஆகஸ்ட் 2011

மட்டக்களப்பிலும் பாரிய தேடுதல் வேட்டை,குடும்பப்பதிவும் மேற்கொள்ளப்படுகிறது!

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிமுதல் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இராணுவத்தினர் பாரிய தேடுதல் வேட்டையினை நடத்தி வருகின்றனர். களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை பிரிவின் 2ஆம் 3ஆம் பிரிவு, வன்னியர் வீதி, சேர்ச் வீதி ஆகியவற்றிலேயே இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று கடும் சோதனைகளை மேற்கொண்டதுடன் குடும்பப் பதிவு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சிலர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, பின் விடுதலை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் மர்ம மனிதன் என்ற பீதியில் மக்கள் உறைந்துள்ள நிலையில் இத்தேடுதல் நடவடிக்கை
ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக மட்டக்களப்பில் பதற்ற நிலையில் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக