
தலை, மார்பு மற்றும் வயிறு என பல இடங்களிலும் பல போலீசாருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே இக்காயங்களின் ஆபத்துத்தன்மையைக் கண்டறிவதற்கான பல்வேறு சோதனைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளன. ஆனால் இத்தாக்குதல் சம்பவத்தின்போது எதுவித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஹெக்ரர் வீரசிங்க தெரிவித்தார்.
இன்றைய தேடுதலுக்காக கிட்டத்தட்ட 4000 சிறைக்கைதிகளை அவர்களின் அறைகளில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர் போலீசார். போதை மருந்து மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலை அடுத்தே கிட்டத்தட்ட 500 போலீசாரும், சிறைச்சாலை அதிகாரிகளும் இத்தேடுதலை மேற்கொண்டுள்ளனர். ஆனால் இதைப் பொறுக்காத கைதிகள் போலீசைத் தாக்கியதில் கலவரம் ஏற்பட்டது. தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாகத் தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக