
இந்த நிலையில், புலிகளின் தலைவர்கள் எவரும் சரணடையவில்லை எனவும் சவேந்திர சில்வா தெரிவித்திருந்தார் எவ்வாறாயினும் புலிகளின் தலைவர்களான புலித் தேவன், நடேசன், ரமேஷ், எழிலன், யோகி, பாலகுமார். இளம்பருதி, கவிஞர் புதுவை இரத்தினதுரை உட்பட பலர் இராணுவத்திடம் சரணடைந்தாகவும் இவர்களை இராணுவத்தினர் தனியான வாகனங்களில் அழைத்துச் சென்றதாக சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் நோர்வே தரப்பின் ஊடாக வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் புலித்தேவன், நடேசன், ரமேஷ் ஆகியோர் வெள்ளை கொடிகளுடன் சரணடைந்தாகவும் எனினும் இவர்கள் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில், உண்மைகள் வெளியாகும் பட்சத்தில் போர் குற்றம் ஊர்ஜிதமாகும் என்பதால், இலங்கை அரச தரப்பு இராணுவ இவ்வாறான கருத்துக்களை முன்வைத்து வருவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சுமத்தியுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக