05 நவம்பர் 2010

மகிந்தவின் விஜயம் ரத்தில்லையாம் ஒத்திவைப்பாம்!

மஹிந்த ராஜபக்ஸ பிரிட்டனுக்கான விஜயத்தை தள்ளி வைத்திருக்கின்றாரே ஒழிய ரத்துச் செய்யவே இல்லை என்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்து உள்ளது.
அவர் டிசம்பர் மாதம் அளவில் இவ்விஜயத்தை மேற்கொள்வார் என்று வெளிவிவகார அமைச்சுப் பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்தார்.
பிரிட்டனில் கைது செய்யப்படலாம் என்கிற அச்சம் காரணமாக இவ்விஜயத்தை ஜனாதிபதி மகிந்த ரத்துச் செய்து விட்டார் என்று சர்வதேச ஊடகங்கள் வதந்தியைக் கிளப்பி விட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக