12 நவம்பர் 2010

கைதுகள்,காணாமல் போதல்களுக்கு படையினரே பொறுப்பு!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கைது சம்பவங்களுக்கும் காணாமல் போன சம்பவங்களுக்கும் இராணுவத்தினருக்கும் முழுத் தொடர்பு இருப்பதாக சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. நேற்று அரியாலை சரஸ்வதி கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசார ணைக்குழு முன் சாட்சியமளித்த பெருமளவானோர் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தினரைக் கண்டால் அவர்களை அடையாளம் காட்ட தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கைதுச் சம் பவங்களுக்கும்,காணாமல் போன சம்பவங்களுக்கும் இராணுவத்தினருக்கும் முழுத்தொடர்பு இருப்பதாக சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியமளித்தவர்கள் தெரிவித்தனர்.அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய கலாசார மண்டபத்தில் நடைபெற்ற கலாசார மண்டபத்தில் நடைபெற்ற விசாரணையின் போதே இவ்வாறு சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. இதில் கோண்டாவிலைச் சேர்ந்த சத்தியாதேவி என்பவர் சாட்சியமளிக்கையில், எனது மகன், அவரது மனைவி 3 பிள்ளைகளுடன் நான் வசித்துவந்தேன்.
2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் திகதி இரவு 8.45 மணியளவில் எமது வீட் டுக்கு வந்த இராணுவத்தினர் விசாரணைக்கென எனது மகனை அழைத்துச் சென்றனர்.ஆனால் அவர் இன்று வரை விடுதலை செய் யப்படவில்லை. எனது மகனை இராணுவத்தினர் அழைத்துச் சென்ற மறுநாளே மனித உரிமை கள் ஆணைக்குழு, ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி, இராணுவத்தரப்பு ஆகியவற்றிடம் முறையிட்டேன் ஆனால் எந்த விதத்திலும் எனக்கு தெரிவிக்கவில்லை.
ஆனால் எனது மகன் ஊரெழு இராணுவமுகாமில் இருப்பதாக அங்கு கண்டவர்கள் என்னிடம் தெரிவித்தனர். எனது மகன் இன்னமும் உயிருடனே இருக்கிறார்.எனக்கு நம்பிக்கை இருக்கிறது எனவே எனது மகனை கண்டு பிடித்துத் தாருங்கள் என அவர் கோரிக்கை விடுத்தார். இதேவேளை. திருநெல்வேலியைச் சேர்ந்த நா.சத்தியவாகேஸ்வரன் என்பவர் சாட்சியமளிக்கையில் கூறியதாவது,
எனது மகன் ரஜீவன். இவர் தகவல் தொழில் நுட்பப் பூங்காவில் பணியாற்றிவந்தார். இவருக்கு 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் திகதி திருமணம் நடந்தது. இவர் திருமணம் செய்து 15 ஆவது நாளே இராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.சம்பவநாளன்று இரவு வீடுபுகுந்த இராணுவத்தினர் எனது மகனை இழுத்துச் சென்றனர். நாங்கள் கெஞ்சினாம், மன்றாடினோம்.எனது பிள்ளையை விடுதலை செய்யுமாறு கோரினோம் ஆனால் அவர்கள் செவிசாய்க்கவில்லை. மகனை இழுத்துச் சென்றனர். அதனைத் தடுத்த எனது மனைவியின் தலையில் தாக்கினர். மறுநாள் எமது மகனை இராணுவம் அழைத்துச் சென்றமை தொடர்பில் சகல தரப் பினரிடமும் முறையிட்டோம்.
ஆனால்பலன் எதுவுமில்லை எனது மகனை கைது செய்த இராணுவ அதிகாரியை எனக்குத் தெரியும். அவரை நான் அடையாளம் காட்டுவேன். அவர் என்னுடன் நன்கு பழக்கப்பட்டவர் என்றார்.இதேவேளை தனது மகன் வெள்ளவத்தையில் நின்றதை தனது உறவினர்கள் கண்ட தாகவும் அவர் தனது சாட்சியில் மேலும் கூறினார்.
இதேவேளை நேற்றுச் சாட்சியமளித்த நல்லூரைச் சேர்ந்த த.புவனேஸ்வரி என்பவர், தனது மகன் பாதுகாப்பு அனுமதி பெறுவதற்கு யாழ்.சிவில் நிர்வாக காரியாலயத்துக்குச் சென்றபோது காணாமல் போனதாக தெரிவித்தார்.2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி 12.30 மணிக்கு இச்சம்பவம் இடம் பெற்றது. எனது மகன் சிவில் அலுவலகத்துக்குள் சென்று அங்கு இருந்ததை ஏனையவர்கள் கண்டுள்ளனர்.
அவரது சைக்கிள் வெளியில் விடப்பட்டிருந்தது. ஆனால் அவர் பாதுகாப்பு அனுமதியை பெற்றுக் கொண்டு திரும்பி விட்டதாக எமக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் இன்றுவரை வீடுதிரும்பவில்லை தயவுசெய்து எனது மகனை திருப்பித்தாருங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக