25 நவம்பர் 2010

மாவீரர் நாள் செய்திகளை பிரசுரிக்க கூடாதென எச்சரிக்கை!

யாழ் குடாநாட்டில் விடுதலைப் புலிகளது மாவீரர் தினம் தொடர்பான செய்திகளைப் பிரசுரிக்கக் கூடாதென உள்ளுர் ஊடகங்கள் அனைத்தும் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. உள்ளுர் ஊடகங்களுக்கு இன்றிரவு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற கடிதம் ஒன்றிலேயே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மாவீரர் தினம் தொடர்பான செய்திகளைப் பிரசுரித்தால் நாளிதழ்களின் அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்படும் எனவும் அச்சுறுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் பற்றிய தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. கடந்த காலங்களிலும் இதேபோன்று மாவீரர்தினம் தொடர்பான செய்திகளை பிரசுரிக்கக் கூடாதென அச்சுறுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக