11 நவம்பர் 2010

தமிழ் மக்களின் பாரம்பரியங்களை அழிக்கும் முயற்சியில் சிங்களம்!

தமிழர்களின் பாரம்பரியங்களை அழிக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.எந்தவித அனுமதியுமின்றி நாவற்குழியில் சிங்கள மக்கள் குடியமர்த்தப்பட்டமை தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது. தமிழ் மக்களின் நிலங்களை பறிக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு கட்டமே நாவற்குழி மீள்குடி யமர்வு. எந்தவித ஆவணங்களும் இன்றி யாழ்ப்பாணத்துக்கு வந்த சிங்கள மக்கள். தமிழ் மக்கள் வாழ்ந்துவந்த நிலத்தில் குடியமர்த் தப்பட்டுள்ளனர். தட்டிக்கேட்க எவரும் இல்லை என்ற நிலையிலேயே, இந்த குடியமர்த்தல் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழ்மக்களை விரக்திய டையவைத்து அவர்கள் சமாதானத்தை விரும் பவில்லை என்பதை உலகுக்கு காட்டி தமிழ் மக்களை நசுக்குவதற்கே அரசாங்கம் முழு மூச்சுடன் செயற்பட்டு வருகிறது.
யுத்தத்தால் இடம் பெயர்ந்துள்ள மக்களை சொந்த இடங்களில் மீள் குடியேற்றம் செய்யாமல் அரசு தமிழ் மக்களின் நிலங்களைப் பறித்து அதில் சிங்களமக்களை குடியமர்த்தி வருகிறது. இது தொடர்பில் தமிழ்மக்கள் விழிப்படைய வேண்டும். தூரநோக்குடன் செயற்பட வேண்டும். இல்லை எனில் தமிழ்மக்கள் நிர்க்கதியான நிலையிலேயே இருக்க வேண்டும் என அவர் கூறினார். இது குறித்து மகிந்த ராஜபக்சவுடன் கூட்டமைப்பு பேசும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக