11 நவம்பர் 2010

இலங்கை வழக்காளிகளுக்கு சார்பாக ஆஷி மேல்நீதிமன்றம் தீர்ப்பு!

ஆஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டிருக்கும் இலங்கையர்களுக்கு திடீர் யோகம் ஒன்று அடித்துள்ளது.
இவர்கள் எந்நேரமும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் இவர்களின் தலைவிதியை மாற்றக் கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்று இன்று ஆஸி நீதிமன்றம் ஒன்றால் வழங்கப்பட்டு உள்ளது.
அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டமை மற்றும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுகின்றமை ஆகியவற்றை ஆட்சேபித்து இலங்கையர் இருவர் அங்கு மேல்நீதிமன்றம் ஒன்றில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
இவ்வழக்குகளை ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழு விசாரித்தது. அரசியல் தஞ்சம் கோருவோருக்கு விசா வழங்கும் நடைமுறையில் அடிப்படையில் ஏதோ சட்டப் பிழை இருக்கின்றது என்று இக்குழு ஒரு மனதாக தீர்ப்பளித்து உள்ளது. அரசியல் தஞ்சம் கோரி வருவோருக்கு விசா வழங்கும் நடவடிக்கையில் நீதி இல்லாமல் உள்ளது என்றும் இத்தீப்பில் கூறப்பட்டுள்ளது. அரசியல் தஞ்சம் கோருவோர் நாட்டுக்குள் எவ்விதத்தில் காலெடுத்து வைப்பினும் கூட அவர்கள் சட்டத்தின் முன் சமம் ஆனவர்களாக நடத்தப்பட வேண்டும் என்றும் இத்தீர்ப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் வழக்காளிகளுக்கான வழக்குச் செலவை ஆஸி அரசும், குடிவரவு அமைச்சரும் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்காளிகளின் பெயர்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
ஆனால் கடந்த வருடம் ஒக்டோபர் 02 ஆம் திகதி படகு மூலம் கிறிஸ்மஸ் தீவை வந்தடைந்த இலங்கையர்களில் இருவரும் அடங்குகின்றனர். இன்று வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு மூலம் ஆஸியில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டிருக்கும் இலங்கையர்களுக்கு நல்ல காலம் பிறந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக