07 நவம்பர் 2010

ஜெர்மனியில் உத்தம புத்திரன் வெளியிட்டவர் மீது தாக்குதல்!

நேற்று(06.11.2010) ஜெர்மனியில் உள்ள முல்கைம் நகரில் தனுஷ்,ஜெனிலியா நடித்த உத்தம புத்திரன் திரைப்படம் வெளியிடப்பட்டது.இதையறிந்து அங்கு சென்ற இளைஞர் குழுவொன்று உலகத்தமிழ் மக்களின் எதிர்ப்புக்களையும் மீறி இலங்கை சென்றுவந்த ஜெனிலியாவின் திரைப்படத்தை திரையிடுகின்றமைக்கு ஆட்சேபனையை தெரிவித்தனர்.அது மட்டுமல்லாது இனிமேல் தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு செயற்படாத எவரது திரைப்படங்களையும் திரையிடவேண்டாமென வேண்டுகோள் விடுத்தனர்.இதையடுத்து இளைஞர்களுக்கும் திரைப்படத்தை வெளியிட்டவருக்கும் ஏற்ப்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து,கோபம்கொண்ட இளைஞர்கள் அந்நபர் மீது பலத்த தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச்சென்றுள்ளதாக அங்கிருந்த எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக