20 நவம்பர் 2010

யாழ், வவுனியா சர்வதேச செஞ்சிலுவை சங்க அலுவலகங்களுக்கு மூடுவிழா!

யாழ்ப்பானம் மற்றும் வவுனியா சர்வதேச செஞ்சிலுவைச்சங்க கிளைகளை மூடுவதற்கு சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் தீர்மானித்துள்ளதாக கொழும்பு அலுவகலம் கூறியுள்ளது. அந்த பிராந்தியத்தில் தமக்கு பணிகள் இல்லையெனவும் கூறியுள்ளது சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம். ஏற்கனவே மன்னார் அலுவலகம் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. தற்போது வடபகுதிகளில் முற்றாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தமது சேவைகளை இடைனிறுத்தும் நிலைமையே தோன்றியுள்ளது. சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கு அரசியல் ரீதியான அழுத்தமா அல்லது அவர்களின் இயலாத்தன்மையா என எதுவும் உறுதியாக கூற முடியவில்லை. இலங்கை அரசாங்கமானது சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினை ஓர் பொருட்டாக மதிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக