09 நவம்பர் 2010

இந்தியா மனித உரிமை விடயங்களில் விலகியே இருந்துள்ளது!-ஒபாமா.

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வந்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இந்தியாவினை நேற்று திங்கட்கிழமை விமர்சனம் செய்துள்ளார். இந்தியா தனது அண்டை நாடுகளில் நடந்துவரும் மனித உரிமை மோசடிகளைக் கண்டிப்பதில் பின்னிற்கிறது, இந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அமைதியாக இருக்கக் கூடாது மற்றும் இவற்றை அலட்சியம் செய்யக் கூடாது என்று ஒபாமா குறை கூறியுள்ளார். மியன்மாரில் நிகழ்ந்தது போன்ற ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கைகள் நடக்கும்போது உலக நாடுகள் அமைதியாக இருக்கக் கூடாது என்று நேற்று ஒபாமா இந்திய பாராளுமன்றில் ஆற்றிய உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் உரிமை மீறல்களுக்கு எதிராகக் கண்டனம் தெரிவிப்பது அந்நாடுகளின் கடமையாகும். நான் சர்வதேச விடயத்தில் உறுதியாக இருக்கலாம் என்றால், இந்தியா இந்த விவகாரங்களிலிருந்து எட்டி விலகியே பெரும்பாலும் இருந்துள்ளது என்று ஒபாமா குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர ஆசனம் அமைய வேண்டும் என்பதில் அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று ஒபாமா கூறியுள்ளார் என்றாலும், இம்மாதிரியான உலகின் சிறந்த அமைப்பில் இடம்பிடிப்பதற்காக ஜனநாயகத்தை முன்னேற்றுவதற்காக இந்தியா பக்க பலமாக இருக்க வேண்டியதும் தேவையாகும் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக