14 நவம்பர் 2010

ஊசி ஏற்றப்பட்ட மற்றொரு பெண்!

குவைத் சென்று அங்கிருந்து இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட வீரையா லட்சுமி என்ற மற்றொறு பெண்ணுக்கும் ஊசி ஏற்றப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது.
குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவரது உடம்பில் இருந்து ஒன்பது ஊசிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் இன்னும் 5 ஊசிகள் அகற்றப் படவுள்ளாதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சத்திர சிகிச்சைக்கு இரண்டு மணித்தியாலங்கள் எடுத்ததாக குருநாகல் வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் எஸ்.ராஜமந்திரி தெரிவித்தார்.
மூன்று மாதங்களுக்கு முன்பு குவைத்தில் வைத்து தனது மாதாந்தச் சம்பளத்தைக் கேட்டபோது தன்னை துன்புறுத்தி சித்திரவதை செய்து ஊசி ஏற்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஊசிபோன்ற மெல்லிய கம்பிகளே அவ்வாறு ஏற்றப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக