
பீட்டர் ஸ்ரப்பிள் எனும் ஜேர்மனியரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். இவர் இலங்கைக்கு வந்து சிங்கள பெண் ஒருவரை திருமணம் செய்து குடும்பம் நடத்தினார்.
இவரது மனைவி அண்மையில் மரணமடைந்தார். இதனையடுத்து ஜேர்மனியர் வேறொரு திருமணம் செய்து கொண்டார்.
அதன் பின்னர் சிங்கள மனைவிக்குப் பிறந்த மகனுக்கும் இவருக்கும் இடையில் சொத்து குறித்துத் தகராறு எழுந்தது.
ஆத்திரமடைந்த மகன், மொரட்டுவை இல்லத்தில் வைத்துத் தந்தையை பொல் ஒன்றால் அடித்துக் கொன்றுவிட்டு, கண்டியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் சில நாட்கள் தலைமறைவாக இருந்தார்.
பின்னர் திரும்பிவந்து, மொறட்டுவைப் பொலிஸில் சரணடைந்தார். நீதிமன்ற உத்தரவின்படி இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக