26 செப்டம்பர் 2011

சனல்4 வெளியிட்ட காணொளியை பார்வையிடாத பான் கீ மூன் ஸ்ரீலங்கா வெளியிட்ட காணொளியை பார்வையிட்டாரா?

சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த இலங்கையின் கொலைக் களங்கள் ஆவணப் படத்தை இன்னமும் பார்வையிடாத ஐ.நா. பொதுச் செய லர் பான் கீ மூன் அதற்கு போட்டியாக இலங்கை அரசு தயாரித்த Lies Agreed To ஆவணப் படத்தை பார்வையிட்டிருப்பதாக இன்னர் சிற்றிபிரஸ் சந்தேகம் எழுப்பியுள்ளது. ஐ.நா. தலைமையகத்தில் நேற்றிரவு ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூனை சந்தித்து விட்டு ஜனாதிபதி மகிந்த தலைமையிலான குழு வெளியே வந்தது. பான் கீ மூனைப் பற்றிச் சாதாரணமாகப் பேசியவாறே இவர்கள் சந்திப்பு அறையிலிருந்து வெளியே வந்தனர். அப்போது நாங்கள் அவருக்கு அனுப்பிய காணொளியை அவர் ஏற்கெனவே பார்வையிட்டுள்ளார் என்று ஜனாதிபதியைப் பார்த்து பாலித கோஹன கூறியுள்ளார்.
இதனை இன்னர் சிற்றி பிரஸ் செய்தியாளர் மத்யூ ரசல் லீ காணொளியில் பதிவு செய்துள்ளார். பாலித கோஹன கூறியது இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப் படத்திற்குப் போட்டியாக இலங்கை அரசாங் கம் தயாரித்த Lies Agreed To ஆவணப் படமே என்று இன்னர் சிற்றி பிரஸ் கூறியுள்ளது. இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தின் ஒரு இறுவட்டு ஐ.நா. பொதுச் செயலருக்கு அனுப்பப்பட்டு நீண்ட நாட்களாகியும் அவர் அதனைப் பார்வையிடவில்லை.
ஐ.நா. பொதுச்செயலர் இந்த ஆவணப்படத்தை இன்னமும் பார்வையிடவில்லை என்றும் ஆனால் அதன் உள்ளடக்கம் பற்றி அவர் அறிந்து கொண்டுள்ளதாகவும் பான் கீ மூனின் பேச்சாளர் மார்டீன் நெசர்கி கடந்த 22 ஆம் திகதி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக