27 செப்டம்பர் 2011

உண்மையை நிலை நாட்டுவதே எமது நோக்கம்"வழக்கு தொடர்பாக உருத்திரகுமாரன் கருத்து.

2009ம் ஆண்டு போரின் இறுதிக்கட்டத்தின் போது பா.நடேசன், புலித்தேவன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட வெள்ளைக்கொடி விவகாரம், கேணல் ரமேஸ் படுகொலை தொடர்பில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நியூ யோர்க்கில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் முக்கிய இடத்தை வகிக்குமென, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.சிறிலங்கா அரச படைகளிடம் வெள்ளைக் கொடியுடன் சரணடைய சென்றவர்களில, கேணஸ் ரமேசும் ஒருவர் என்ற நிலையில், சர்வதேசத்தின் தொடர்புடைய இந்த 'வெள்ளைக்கொடி' விவாகாரம் முக்கிய இடத்தை வகிக்கவுள்ளது.
சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச மீது தொடுக்கபபட்ட, முதலாவது போர்குற்ற வழக்காக அமைந்துள்ள கேணல் ரமேஸ் படுகொலை வழக்கில் பிரதமர் வி.உருத்திரகுமாரனே சட்டவாளராக பங்காற்றுகின்றார்.
இந்நிலையில் திங்கட்கிழமை லண்டன் பிபிசி தமிழோசைக்கு வழக்கு தொடர்பில் செவ்வியொன்றை வழங்கியுள்ளார்.
நட்டஈடு கோருவதாக இந்த வழக்கு அமைந்திருந்தாலும், வழக்கின் நோக்கம் மக்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றியதான உண்மையும், மக்களுக்கு நீதியும் கிடைக்க வேண்டியுமே, கேணஸ் ரமேசின் மனைவயினால் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்தார்.
நீதி விசாரணையை நடாத்துவதற்குரிய சட்ட வெளியோ அல்லது அரசியல் வெளியோ இலங்கதை; தீவில் இல்லாத காரணத்தினால்தான், புலத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் மேலும் அந்தச் செவ்வியில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சட்டங்களுக்கு அமைய, நீதிமன்ற அழைப்பாணையை மகிந்த ராஜபக்சவிடம் சேர்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக