27 செப்டம்பர் 2011

மகிந்த ஸ்ரீலங்கா திரும்பினார்!வழக்கிற்கு பயந்து ஓடித்தப்பினாரா?

ஐ.நா சபை பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இன்று காலை நாடு திரும்பியுள்ளார் என அரச தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவில் தங்கியிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நியூயோர்க் மாவட்ட நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியிருந்ததாக முன்னர் தகவல் வெளியாகியிருந்தது. கேணல் ரமேஸின் மனைவி நியூயோர்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தேவி எதிர் ராஜபக்ஷ வழக்கிலேயே ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது என ஈ.ஐ.என். செய்தி தெரிவித்திருந்தது.
இந்த வழக்கை இலங்கை படைகளிடம் சரணடைந்த பின்னர் படுகொலை செய்யப்பட்ட கேணல் ரமேஸின் மனைவி வத்சலாதேவியின் சார்பில் சட்டவாளர் வி.ருத்ரகுமாரன் கடந்த 22 ஆம் திகதி தாக்கல் செய்திருந்தார்.
கேணல் ரமேஸின் படுகொலை மற்றும் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு அடிப்படைக் காரணமாக இருந்தவர் என்ற அடிப்படையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவித்திருந்தன.
இந் நிலையில் ஜனாதிபதி அவசரமாக நாடுதிரும்பியிருப்பதன் பின்னணி இதுவாக இருக்கலாமோ? என்று சந்தேகம் வெளியிடப்பட்டிருக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக