03 செப்டம்பர் 2011

வன்னி மக்களை மிரட்டிய மிக் விமானங்கள்!

வன்னி வான்பரப்பில் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான மிக் மிகை ஒலி விமானங்கள் இரண்டு இன்று தாழப்பறந்து வட்டமிட்டதால் மக்கள் குழப்ப நிலைக்கு உட்பட்டிருக்கின்றனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
இன்று அதிகாலை வன்னி வான்பரப்பில் பறந்த இரண்டு மிகை ஒலி விமானங்கள் தாழப்பறந்து தாக்குதல் நடத்துவது போல ஒலி எழுப்பியிருக்கின்றன. இவற்றின் ஒலியினால் குழந்தைகள், முதியவர்கள் கடந்த காலங்களை நினைவுபடுத்தி மனத் தாக்கத்திற்கு உட்பட்டதாக வன்னியில் இருந்து எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அரை மணி நேரத்திற்கும் மேலாக முல்லைத்தீவு மாவட்டத்தின் மேலாக இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக