24 செப்டம்பர் 2011

சவேந்திர சில்வாவிற்கு அமெரிக்க நீதிமன்று பிடிவிறாந்து!எந்நேரமும் அமெரிக்காவை விட்டு தப்பியோடலாம்!

அதிரவைக்கும் செய்திகள் தற்போது அமெரிக்காவில் இருந்து வெளியாகியவண்ணம் இருக்கிறது. ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான சர்வேந்திர சில்வாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. சற்று முன்னர் அமெரிக்காவில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அமெரிக்க சிவில் நீதிமன்றம் இந்தப் பிடியாணையைப் பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலகத் தமிழர் பேரவை(GTF) உதவியுடனே அமெரிக்க நீதிமன்றில் இந்த வழக்கு தொடரப்பட்டதாக செய்திகள் கசிந்துள்ளது. தற்போது அவர் ஐ.நா வின் கட்டிடத்தில் பாதுகாப்பிற்காக தங்கவேண்டி நிலை தோன்றியுள்ளதாகவும் மேலும் அறியப்படுகிறது. ஐ.நா வின் பிரதிநிதி என்ற வகையில் அவர் ஐ.நா கட்டிடத்தினுள் தங்கும்வரை அவரை அமெரிக்க பொலிசார் கைதுசெய்ய முடியாது. இருப்பினும் அவர் அக்கட்டிடத்தை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை தோண்றியுள்ளது.
இதன் காரணமாக அவர் அமெரிக்காவை விட்டு நாளை அல்லது இன்றைய தினம் இரவு வெளியேற வேண்டிய சூழ் நிலை தோன்றியுள்ளது. அவர் பெரும்பாலும் ஐ.நாவின் வாகனத்தில் ஏறி அதன் பாதுகாப்புடன் அமெரிக்காவில் இருக்கும் எதாவது ஒரு விமனாநிலையமூடாக வெளியேறலாம் என எதிர்வுகூறப்படுகிறது. இலங்கை அரசாங்கத்தின் மேல் அடுத்த பேரிடியாக இது வீழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழக சட்ட பீடமே இந்த வழக்கைத் தொடுத்ததாகவும், நீதிமன்றில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் இலங்கை இறுதிப்போரில் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகச் சுட்டிக்காட்டியும் அப்போது 58 படைப்பிரிவுக்கு தலைமையேற்ற சர்வேந்திர சில்வா இனப்படுகொலை செய்துள்ளதாகவும் வாதாடியுள்ளார்.
இதனை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி சர்வேந்திர சில்வாவைக் கைதுசெய்து நீதிமன்றில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார் எனவும் அறியப்படுகிறது. புலம்பெயர் ஈழத் தமிழர் போராட்டங்களில் இது ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளதோடு ஒரு வரலாறு படைக்கும் விடையமாகவும் பார்க்கப்படுகிறது.
நன்றி:அதிர்வு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக