
இதன் காரணமாக அவர் அமெரிக்காவை விட்டு நாளை அல்லது இன்றைய தினம் இரவு வெளியேற வேண்டிய சூழ் நிலை தோன்றியுள்ளது. அவர் பெரும்பாலும் ஐ.நாவின் வாகனத்தில் ஏறி அதன் பாதுகாப்புடன் அமெரிக்காவில் இருக்கும் எதாவது ஒரு விமனாநிலையமூடாக வெளியேறலாம் என எதிர்வுகூறப்படுகிறது. இலங்கை அரசாங்கத்தின் மேல் அடுத்த பேரிடியாக இது வீழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழக சட்ட பீடமே இந்த வழக்கைத் தொடுத்ததாகவும், நீதிமன்றில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் இலங்கை இறுதிப்போரில் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகச் சுட்டிக்காட்டியும் அப்போது 58 படைப்பிரிவுக்கு தலைமையேற்ற சர்வேந்திர சில்வா இனப்படுகொலை செய்துள்ளதாகவும் வாதாடியுள்ளார்.
இதனை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி சர்வேந்திர சில்வாவைக் கைதுசெய்து நீதிமன்றில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார் எனவும் அறியப்படுகிறது. புலம்பெயர் ஈழத் தமிழர் போராட்டங்களில் இது ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளதோடு ஒரு வரலாறு படைக்கும் விடையமாகவும் பார்க்கப்படுகிறது.
நன்றி:அதிர்வு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக