01 செப்டம்பர் 2011

விடுதலை செய்யப்பட்ட போராளிகள் மீது படைகள் அடாவடி!

யாழ். மாவட்டத்தில் வசிக்கும் முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் மற்றும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக கடந்த காலங்களில் செயற்பட்டவர்கள் கடுமையான அச்சுறுதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வசித்து வரும் புனர்வாழ்வின் பின் விடுவிக்கப்பட்டு, இராணுவ முகாம்களில் ஒப்பமிட்டு வரும் போராளிகள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளுக்குச் செல்லும் படையினர் தேவையற்ற கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் போராளிகளைத் துருவித்துருவி விசாரணை செய்யும் புலனாய்வுப் பிரிவினர், அவர்களது குடும்பத்தினருக்கும் அசௌகரியங்களை ஏற்படுத்தி வருகின்றனர். அத்துடன் இரவு வேளைகளில் வீட்டிற்கு வந்து இடைஞ்சல் தருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் பல குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் அச்சமடைந்துள்ளனர்.
மர்ம மனிதனின் பிரச்சினையால் அந்தப் பகுதியில் இடம் பெற்ற சம்பவங்களோடு முன்னாள் போராளிகளை தொடர்புபடுத்தி திசை திருப்பும் முயற்சியில் படையினர் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக