10 செப்டம்பர் 2011

புத்தூரில் மீட்கப்பட்டு யாழ்,மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ள சடலம் மர்ம மனிதனுடையதா?

புத்தூர் மீசாலை வீதியில் புத்தூர் சந்தியில் இருந்து ஒன்றரை கிலோ மீற்றர் தூரத்தில் அடிகாயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் நேற்றுக் காலை மீட்கப்பட்டுள்ளது. வீதித் திருத்தபணிக்காக நேற்றுக் காலை சென்ற சிலர் வீதியில் அடிகாயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் கிடந்ததை கண்டுள்ளனர்.
இது தொடர்பாக அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சப்இன்ஸ்பெக்டர் கஜசிங்க தலைமையிலான பொலிசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
காற்சட்டையும் பெனியனுடமே குறித்த சடலம் மீக்கப்பட்டுள்ளது. சடலம் பழுதடைந்த நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட சடலம் நேற்றிரவு வரை இனம் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் சடலம் மர்ம மனிதனுடையதா? என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக