18 செப்டம்பர் 2011

மக்களின் ஆணைக்கு கூட்டமைப்பு துரோகம் இளைக்கின்றது!

மக்களின் ஆணைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு துரோகம் இளைக்கின்றது. இலங்கை அரசை சர்வதேச நாடுகளின் அழுத்தங்களில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக மீண்டும் ஒரு பேச்சுவார்த்தையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டு வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.
தமிழ் தேசிய முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று சனிக்கிழமை நடைபெற்றபோது இதனைத் தெரிவித்தார்கள். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், சுயநிர்ணயம் என்ற சொல்லை சொற்களிலும் மக்களிடமும் கூறிக்கொண்டு நடைமுறையில் முழுமையாகக் கைவிட்ட நிலையில் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. தற்போதய பேச்சுவார்த்தை எந்த சூழலில் நடைபெறுகிறது என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
13வது திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டு மாகாணசபை முறைமையை கூட்டமைப்பால் ஏற்றுக் கொள்ளப்பட்டால் அதிகாரப்பகிர்வு குறித்தோ சுயநிர்ணய உரிமை குறித்தோ கூட்டமைப்பினால் பேச முடியாது. எனவே அவற்றைக் கைவிட்டு விட்டார்களா என்பதே இன்றுள்ள கேள்வி. அப்படியாயின் வடகிழக்கில் நடந்த அத்தனை தேர்தல்களிலும் கூட்டமைப்புக்கு மக்கள் வாக்களித்தனர். இந்த சுயநிர்ணய உரிமை, என்ற ஒன்றிற்காகவே.
நாம் கூட்டமைப்பிற்க்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கின்றோம், இந்த மாகாணசபை முறைமையை கூட்டமைப்பு நிராகரிக்கவேண்டும், பதிலாக ஆர்வமுள்ள சமுக ஆர்வலர்களை இணைத்து சுயேட்சைக் குழுவொன்றை உருவாக்கி கூட்டமைப்பு அதற்கு ஆதரவளிக்கவேண்டும்.
இலங்கை அரசு சுதந்திரம் பெற்ற காலத்திலும் பார்க்க தற்போது உலக நாடுகளின் கடும் அழுத்தத்தில் இருக்கிறது. உரிமைப் போராட்டத்தில் புலம் பெயர் தமிழர்களின் செயற்பாடு அதிகரித்துள்ள நிலையில் தமிழர் பகுதிகளில் இருந்து செய்ய முடியாத செயல்களை புலம்பெயர்ந்தவர்கள் செய்கின்ற நிலையில் இவை அனைத்தையும் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் செயற்பட்டு வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக