18 செப்டம்பர் 2011

ஒட்டுக்குழுக்களை பாதுகாப்பு வலயத்தினுள் இரகசியமாக அனுப்பி வைத்தோம்!

முள்ளிவாய்க்கால் பாதுகாப்பு வலையத்தினுள் ஒட்டுக்குழுக்களை இரகசியமாக அனுப்பி வைத்தோம். அந்த ஒட்டுக்குழுக்களும் எமது படையினரும் புலிகளின் முன்னரங்க நிலைகளை உடைக்க மக்களிற்கு உதவினார்கள் என மஹிந்த கூறியுள்ளார்.
2009 ஆம் ஆண்டு அமெரிக்க துணைத்தூதருக்கு மஹிந்த இராஜபக்‌ஷ இத்தகவலை தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் கூறியுள்ளது. மே மாதம் முள்ளிவாய்க்காலில் பொதுமக்கள் படையினரிடம் தப்பி ஓடும் வேளை அங்கு புலிகள் தான் அவர்களை சுட்டுக்கொலை செய்தார்கள் என படையினர் கூறினர்,ஆனால் அந்த நேரமே விடுதலைப்புலிகள் போல வந்த கருணாவின் ஒட்டுக்குழுக்களும் படையினரும்தான் மக்களைச்சுட்டதாகவும் விடுதலைப்புலிகளுக்கும் மக்களுக்கும் இடையே குழப்பத்தினை ஏற்படுத்த முயற்சித்ததாகவும் பொதுமக்கள் பலர் கூறினர். ஆனால் சர்வதேசம் அதனை நம்ப மறுத்தது.
ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி மற்றும் மே மாதம் 13 ஆம் , 14 ஆம் திகதிகளில் பொதுமக்கள் கண்ணிவெடிகள் மற்றும் இராணுவத்தினரின் தாக்குதல்களுக்கு மத்தியிலும் முன்னரங்க நிலைகள் நோக்கி ஒடினர். இவர்களை ஓடுமாறு தூண்டி வற்புறுத்தியது விடுதலைப்புலிகள் வடிவில் இருந்த ஒட்டுக்குழுக்கள்தான்.அதுமட்டுமன்றி ஓடிய பொதுமக்களை சுட்டுக்கொன்றதும் இவர்கள்தான்.
இப்போது உண்மைகள் மெல்ல மெல்ல வரத்தொடங்குகின்றன. மஹிந்த தமது ஆள ஊடுருவும் படையும் ஒட்டுக்குழுக்களும் உள்ளே ( பாதுகாப்பு வலையத்தினுள் நுழைந்து முன்னணி காவலரண்களை உடைக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியமையினை கூறியுள்ள நிலையில் அங்கு நடந்த பொதுமக்கள் மீதான நடவடிக்கைகள், காட்டுமிராண்டித்தனங்கள் போராளிகள் வடிவில் இருந்த மஹிந்தவின் ஆட்களே.
இது இவ்வாறு இருக்க சரத் பொன்சேகா போர் முடிந்த கையோடு தாம் ஒட்டுக்குழுக்களை ஒரு போதும் படை நடவடிக்கையில் பயன்படுத்தவில்லை என பொய்கூறினார். ஆனால் மஹிந்த இராஜபக்‌ஷவோ தாம் பயன்படுத்தியதாக கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக