11 செப்டம்பர் 2011

மர்ம மனிதனுக்கு அடைக்கலம் கொடுத்த படையினரை சிறைப்பிடித்த வலிகாமம் மக்கள்!

வலிகாமம் மேற்குப் பகுதியில் கிறிஸ் மனிதனின் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி இளைஞர்களிற்கு தகவல்கள் கிடைத்ததைத் தொடர்ந்து கிறிஸ் மனிதனைப் பிடிக்கச் சென்றபோது அதனைத் தடுக்க முற்பட்ட இரண்டு இராணுவத்தினரை மக்கள் பிடித்து அடைத்து வைத்தனர்.
பொதுமக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் ஏற்பட்ட நீண்ட இழுபறியின் பின்னர் குறிப்பிட்ட இரு இராணுவத்தினரை விடுவித்ததைத் தொடர்ந்து இராணுவத்தினர் தம்முடன் அழைத்துச் சென்றனர்.
குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வலிகாமம் மேற்கு தொல்புரம் பாணாவெட்டிப் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்ட வேளை அப்பகுதியில் இரு மர்மமனிதர்களின் நாடமாட்டத்தை அவதானித்த மக்கள் பிடிப்பதற்காகத் துரத்திச்சென்ற வேளை அப்பகுதிக்கு உடனடியாக வந்த இராணுவத்தினர் மர்ம மனிதர்களுக்கு பாதுகாப்பு வழங்கி அழைத்துச் செல்ல முற்பட்டனர். எனினும் பொது மக்கள் அதிகமாகக் கூடி இரண்டு படையினரை பிடித்து ஒரு வீட்டிற்குள் வைத்துப் பூட்டியுள்ளனர்.
இதனால் ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து, பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பிடிக்கபட்டவர்களை மீட்டுக் கொண்டு செல்வதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு மக்களுடனான வாக்குவாதத்தின் பின்னர் தம்முடன் அழைத்துச் சென்றனர். பொது மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட இரு இராணுவத்தினரை மீட்டுக் கொண்டு செல்வதற்கு பொது மக்களுடன் வாக்குவாதப்பட்டு நீண்ட இழுபறியின் பின்னர் கைது செய்யப்பட்ட இராணுவத்தினரை அழைத்துச் சென்றனர். அத்துடன் இச்சம்பவத்தில் முன்னின்று செயற்பட்ட பொதுமக்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை வலி மேற்கு, அராலி தெற்கு, மேற்குப் பகுதிகளிலும் மர்ம மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்பட்டதுடன் வலி மேற்கு பிரதேசசபை தவிசாளர் வீட்டிற்கும் மர்ம மனிதர்கள் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக