28 செப்டம்பர் 2011

ரொபேர்ட் ஓ பிளேக்கிற்கு ஏளனமாக பதிலளித்தார் கோத்தபாய!

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது பாதுகாப்பு வலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பீரங்கித் தாக்குதலில் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்­ஷ‌விடம் அப்போது இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக இருந்த ரொபேர்ட் ஓ பிளேக் கூறியபோது மோசமான காலநிலை காரணமாக இருநாட்களாக ஜெட் போர் விமானங்கள் பறக்கவில்லை என அவர் ஏளனமாக பதிலளித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் திகதி அப்போதைய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் இது குறித்து அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பிய இரகசிய தகவல் குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் திகதி பாதுகாப்பு வலயத்தில் பலத்த பீரங்கித் தாக்குதல்கள் மேற்கொள் ளப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இத்தகவல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தப் பீரங்கித் தாக்குதல்களில் 124 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் 254 பொது மக்கள் காயமடைந்ததாகவும். ஐக்கிய நாடுகளின் சபையின் பிரதிநிதி தனக்கு தெரியப்படுத்தியுள்ளதாக இத் தகவல் குறிப்பில் றொபோர்ட் ஓ பிளேக் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் திகதி பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜ பக்­ஷ‌வைச் சந்தித்து பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசங்களை இலக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டாம் என வலியுறுத்தியதாக றொபேர்ட் ஓ பிளேக் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த தகவல் குறிப்பில் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் விடுதலைப்புலிகளின் பீரங்கி நிலைகள் இருந்தாலும் கூட அப் பிரதேசங்களை இலக்கு வைத்து பீரங்கித் தாக்குதலை மேற்கொள்ள வேண்டாம் என கோத்தபாய ராஜபக்­ஷ‌ விடம் தான் வலியுறுத்தியதாகவும் றொபேர்ட் ஓ பிளேக் கூறியுள்ளார்.
இந் நிலையில் மோசமான காலநிலை காரணமாக இரு நாட்களாக ஜெட்போர் விமானங்கள் பறக்கவில்லை என ஏளனமாக பதில் அளித்த கோத்தபாய ராஜபக்­ஷ‌ இதன்போது பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து வியப்புடன் கேள்வி எழுப்பியதாகவும் விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பீரங்கித் தாக்குதலில் பொதுமக்களுக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இப்பாதுகாப்பு வலயங்களை இலக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டாம் என களத்தில் இருக்கின்ற படை தளபதிகளுக்கு பணிக்கு மாறு படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்­ஷ‌விடம் றொபேர்ட் ஓ பிளேக் வலியுறுத்தியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக