29 செப்டம்பர் 2011

அட...! என்னதான் நடக்குது அங்க?

யாழ்,மாநகரசபையின் பெண் ஊழியர் ஒருவரின் மார்புகளை பிடிக்க முயன்று மாட்டுப்பட்டு இருப்பவர் அம்மாநகரசபையின் ஆளும் கட்சி உறுப்பினர் மனுவல் மங்களநேசன்.
ஆயினும் இவரைப் பற்றி ஊடகங்களில் வெளிவராத செய்தி ஒன்று உள்ளது. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் போட்டி இட்டு இருந்த இவர் கணிசமான வாக்குகளை பெற்று இருந்தார்.
கல்வித் தகைமை, அரசியல் அறிவு மற்றும் அனுபவம் வாக்குகள் ஆகியவற்றை பார்க்கின்றபோது அவருக்கே முதல்வர் பதவி கிடைக்கும் என்று மனப் பால் குடித்து இருந்தார்.
ஆயினும் யோகேஸ்வரி பற்குணத்தை முதல்வர் ஆக்குகின்றமைக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எடுத்த முடிவு மங்களநேசனை மட்டுமன்றி மங்களநேசனின் ஆதரவாளர்களையும் கோபப்பட வைத்தது.
வீட்டில் ஆதரவாளர்கள் சகிதம் குழுமி மந்திராலோசனை நடத்தினார் மங்களநேசன். மந்திராலோசனை மதுவில் கலந்தது. போதை தலைக்கேறியமையுடன் அமைச்சரின் கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்தார் மங்களநேசன்.
நீ என்ன யோகேஸ்வரியை வைத்திருக்கின்றாயா? ..... எனக்குதான் முதல்வர் பதவியை தர வேண்டும்.... இல்லையேல் பெரிய பிரச்சினை வரும்.... என்று தொலைபேசியில் சத்தம் இட்டு இருக்கின்றார்.
சிறிது நேரம் கழிந்தது. குண்டர்களுடன் வந்து இறங்கினார் வேட்டிக் கட்டோடு டக்ளஸ். மங்களநேசனை அலாக்காக தூக்கினார். நன்றாக போட்டுத் தாக்கினார். வானில் ஏற்றிச் சென்றார்.
முதல்வர் பதவியேற்பு வைபவம் நிறைவடைகின்றவரை மங்களநேசனை இரகசிய அறை ஒன்றில் பூட்டியும் வைத்தாராம் டக்ளஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக